|
ஆடி நிறை விழா அழைப்பிதழ் - 2018
நமது கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தான கோவிலில் வருகின்ற
புதன்கிழமை
15.08.18 அன்று ஆடி நிறை விழா கொண்டாட பட இருக்கின்றது. அன்று காலை 7.00 மணி
அளவில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு கோவிலுக்கு வருகின்ற பக்தர்களுக்கு புதிதாக அறுவடை செய்யப்பட்ட
நெற்கதிர்கள் சுமார் 7:45 மணி முதல் 9:30 மணி வரை வழங்கபட இருக்கிறது. ஆதலால் பக்தர்கள் அனைவரும்
தங்கள் குடும்பத்துடன் தவறாது கோவிலுக்கு வருகை தந்து விழாவினை சிறப்பித்து இறைவனருள் பெற்று
செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
பக்தர்கள் நெற்கதிர்களை வாங்கி தங்களுடைய வீட்டின் பூஜை அறை, சமையலறை, வரவேற்பறை,
முதலிய எல்லா அறைகளிலும் அதனை கட்டி வைத்தால் ஆண்டு முழுவதும் வீட்டில் சந்தோஷம் பெருகும்.
செல்வம் கொழிக்கும் என்பது ஐதீகம்.
Back
|