|
முத்தாரம்மன் கோவில் கொடை - 2013
மூன்றாவது நாள் - கொடை விழா
நமது இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் அமைந்துள்ள
முத்தாரம்மன் கோவிலில் கொடைவிழாவின் மூன்றாவது
நாளான மே மாதம் 15-ம் தேதி புதன்கிழமை
முத்தாரம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனையும்,
அதனை தொடர்ந்து அன்னதானத்துடன்
கொடைவிழா இனிதே முடிவு பெற்றது.
இவ்விழாவினை நல்ல முறையில் நடத்த
உறுதுணையாய் இருந்த சமுதாய மற்றும் தேவஸ்தான
தலைவர் திரு.C.விஜயகுமார் அவர்களுக்கும்,
அனைத்து நிர்வாகிகளுக்கும், மகளிர்
அணியினருக்கும்,
கொடைவிழாவிற்கு பண உதவி மற்றும் பொருளுதவி
அளித்தவர்களுக்கும், மிகுந்த ஒத்துழைப்பு தந்த
சமுதாய பெருமக்களுக்கும், இளைஞர் அணிக்கும்,
எங்களுடன் சேர்ந்து இரவு பகல் பாராது
உழைத்த
இரணியல் நண்பர்களுக்கும் விழாக்குழுவின் சார்பாக
மிக்க நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
இப்படிக்கு
விழா குழுவினர்,
Back |